image courtesy: AP/PTI 
கால்பந்து

மெஸ்சியுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் இவ்வளவா..? ரசிகர்கள் குமுறல்

ஐதராபாத்தில் மெஸ்சியை சந்தித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வருகிற 13-ந்தேதி அதிகாலை கொல்கத்தா வந்தடையும் மெஸ்சி, அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் பாதுகாப்பு கருதி அவர் ஓட்டலில் இருந்தபடி காணொலி வாயிலாக சிலையை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் இந்தியா வரும் மெஸ்சியுடன் புகைப்படம் எடுப்பதற்கு கட்டணமாக ரூ.9.95 லட்சம் + ஜிஎஸ்டி (ஏறக்குறைய ரூ.10 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்தின் பலக்னுமா அரண்மனையில் 13-ம் தேதி அன்று மெஸ்ஸியை சந்தித்து புகைப்படம் எடுக்கும் வகையில், மாவட்ட செயலியில் (District App) 100 டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இருப்பினும் மெஸ்சியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் அதிகம் என்று ரசிகர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்