கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணி முதல் தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. ஜாம்ஷெட்பூர் அணியில் வல்ஸ்கிஸ் 30-வது மற்றும் 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஏ.டி.கே.மோகன் பகான் அணி தரப்பில் ராய் கிருஷ்ணா 80-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

முதல் 3 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட ஏ.டி.கே. மோகன் பகான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்