கோவா,
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. ஜாம்ஷெட்பூர் அணியில் வல்ஸ்கிஸ் 30-வது மற்றும் 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஏ.டி.கே.மோகன் பகான் அணி தரப்பில் ராய் கிருஷ்ணா 80-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.
முதல் 3 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட ஏ.டி.கே. மோகன் பகான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.