கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக 51 வயதான பேஸிதார் பாண்டோவிச் (மான்டினெக்ரோ) நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக 51 வயதான பேஸிதார் பாண்டோவிச் (மான்டினெக்ரோ) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய பயிற்சியாளர் சபா லாஸ்லோவுக்கு (ருமேனியா) பதிலாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பேஸிதார் பாண்டோவிச் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை அணியினருடன் இணைய ஆர்வமுடன் காத்திருக்கிறேன், சென்னை அணியை மேலும் மேம்படுத்துவதும், வீரர்களை யுக்தி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏற்றம் காண செய்வதும் எனது இலக்கு என்று புதிய பயிற்சியாளர் பாண்டோவிச் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு