கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

தினத்தந்தி

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணியில் ரஹிம் அலி 2-வது நிமிடத்திலும், வல்ஸ்கிஸ் 69-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இறங்கிய சென்னை அணி டிரா கண்டதால் ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது. 17-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 5 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்