கோப்புப்படம்  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஆறுதல் வெற்றிபெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி

மும்பை அணி ஏற்கனவே அரைஇறுதியை எட்டியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அதற்குரிய கோப்பையை பெற்றது.

தினத்தந்தி

மும்பை,

11 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது. வெற்றிக்குரிய கோலை பெங்கால் அணி வீரர் நாரெம் மகேஷ் சிங் 52-வது நிமிடத்தில் அடித்தார்.

என்றாலும் மும்பை அணி 14 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி என்று 46 புள்ளிகளுடன் ஏற்கனவே அரைஇறுதியை எட்டியதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அதற்குரிய கோப்பையை பெற்றது.

அதே சமயம் 19-வது ஆட்டத்தில் ஆடி 6-வது வெற்றியை பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி, பிளே-ஆப் வாய்ப்பை இழந்து விட்டதால் இது அவர்களுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு