Image Tweeted By IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி

கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் -எப்.சி கோவா அணிகள் மோதின.

தினத்தந்தி

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் -எப்.சி கோவா அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 2-வது நிமிடத்திலே கோவா வீரர் இக்கீர் குரரோடஸேன அந்த அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 12-வது நிமிடத்தில் கோவா அணி 2-வது கோலையும் அடித்து தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

ஜாம்ஷெட்பூர் வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடக்க முடியவில்லை. மாறாக கோவா வீரர் பிரிசன் பெர்னாண்டஸ் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அந்த அணிக்கு 3-வது கோலை அடித்தார். இதன் மூலம் இறுதியில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்