கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி

ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.

கோவா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் 6-வது நிமிடத்தில் மும்பை வீரர் ரபெல் பாஸ்டோஸ் கோல் அடித்தார். கோவா வீரர்களால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியால் அந்த அணிக்கு பலன் இல்லை. ஏற்கனவே அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கோவா 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி இருந்தது. இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் 5-2 என்ற கோல் முன்னிலையுடன் கோவா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வருகிற 17-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு