கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? பெங்களூருவுடன் இன்று மோதல்

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. எப்.சி.கோவா அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியை (ஒரு டிரா, 4 வெற்றி) சந்தித்ததில்லை. பெங்களூரு எப்.சி. அணி 10 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதிய முதலாவது லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும்.

அதேநேரத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண பெங்களூரு அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்