image courtesy: Indian Super League twitter 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து நாக்-அவுட் சுற்று: ஒடிசா- கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை

புவனேஸ்வரில் இன்று நடக்கும் முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை சிட்டி அணிகள் நேரடியாக அரைஇறுதி சுற்றை எட்டியது. 3 முதல் 6-வது இடத்தை பெற்ற எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் புவனேஸ்வரில் இன்று நடக்கும் முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்