Image Courtesy: @ChennaiyinFC  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் மந்தர் ராவ்

மந்தர் ராவ் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியில் கோவாவைச் சேர்ந்த மந்தர் ராவ் தேசாய் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

32 வயது பின்கள வீரரான மந்தர் ராவ் 2024-25-ம் ஆண்டு சென்னையின் எப்.சி.யில் இணையும் 7-வது வீரர் ஆவார். அவர் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.

155 ஐ.எஸ்.எல். ஆட்டங்களில் ஆடிய அனுபவசாலியான மந்தர்ராவ், 2021-ம் ஆண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்