image courtesy: Indian Super League twitter 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி அபார வெற்றி

பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

தினத்தந்தி

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டி விட்ட நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னையின் எப்.சி. (27 புள்ளி) நேற்று பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது.

இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில், முதல் பாதியில் ஹெக்டர் யுஸ்தே ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து இரண்டாவது பாதியில் மன்வீர் சிங் ஆட்டத்தின் 51-வது நிமிடத்திலும், அனிருத் 54-வது நிமிடத்திலும், அர்மாண்டோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

பெங்களூரு அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது