image courtesy: Punjab FC twitter 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

தினத்தந்தி

கவுகாத்தி,

12 அணிகளுக்கு இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பஞ்சாப் எப்.சி. அணி சார்பில் வில்மர் ஜோர்டான் கில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை