image courtesy: Indian Super League twitter  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

தினத்தந்தி

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் ஜோனி கவுகோ ஆட்டத்தின் 29-வது நிமிடத்திலும், திமித்ரி 90+4-வது நிமிடத்திலும், தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் ஜோர்டான் முர்ரே ஆட்டத்தின் 72-வது நிமிடத்திலும், ரியான் எட்வர்ட்ஸ் 80-வது நிமிடத்திலும், இர்பான் 90+7-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு