கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் தோல்வி தொடருகிறது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணியின் தோல்வி தொடருகிறது.

தினத்தந்தி

சென்னை,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 20-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

அந்த அணி வீரர் மொடோவ் சோகோவ் கோலை நோக்கி அடித்த பந்தை சென்னை அணியின் கோல்கீப்பர் கரண்ஜித் சிங் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை மொடோவ் சோகோவ் மின்னல் வேகத்தில் அடித்து கோலுக்குள் திணித்தார். இந்த சீசனில் சென்னை அணி விட்டுக்கொடுத்த 11-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதில் கோல் திருப்ப சென்னை அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை