Image Courtesy: @ChennaiyinFC  
கால்பந்து

ஐ.எஸ்.எல்.தொடர்; சென்னைக்கு 2வது வெற்றி கிடைக்குமா..? - ஐதராபாத்துடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது.

தினத்தந்தி

ஐதராபாத்,

இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது.

சென்னையில் நடந்த 2-வது லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோத உள்ளன.

சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் ஆடிய 2 ஆடங்களிலும் தோல்வி கண்டுள்ள ஐதராபாத் தனது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்