கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடக்கம்

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடருக்கான முதல் கட்ட போட்டி அட்டவணையை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.

தினத்தந்தி

கோவாவில் உள்ள 3 மைதானங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. போட்டி நவம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 115 ஆட்டங்களில் தற்போது முதல் 55 ஆட்டங்களுக்கான (ஜனவரி 9-ந் தேதி வரையிலான) அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 9.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு ஆட்டம் நடைபெறும் நாட்களில் முதலாவது ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது நினைவுகூரத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது