image courtesy:twitter/@IndianFootball 
கால்பந்து

ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: நேபாளத்தை பந்தாடிய இந்திய அணி

இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

தினத்தந்தி

திம்பு,

7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-0 என்ற கணக்கில் நேபாளத்தை பந்தாடி அபார வெற்றி பெற்றது. அபிஸ்தா பாஸ்நெட், நீரா சானு லாங்ஜாம், அனுஷ்கா குமாரி தலா 2 கோலும், ஜூலன் ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்