கால்பந்து

எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டி; லெபனானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டியில் லெபனான் அணியை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எஸ்.ஏ.எப்.எப். சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று (சனிக்கிழமை) நடந்த போட்டி ஒன்றில் லெபனான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின.

இந்த போட்டியில், போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் வெற்றி பெறவில்லை. எனினும், பெனால்டி முறையில் இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியது.

இந்திய அணி பெனால்டியில் 4-2 என்ற புள்ளி கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் குவைத் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

சமீபத்திய பிபா தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஓரிடம் முன்னேறி 100-வது இடத்திற்கு வந்து இருந்தது. இன்று நடந்த மற்றொரு போட்டியில், வங்காளதேச அணியை 1-0 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு