கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா

பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

லண்டன்,

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் 20 அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக மே 17ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடும் 748 வீரர்களின் மாதிரியில் மூன்று வெவ்வேறு கிளப்புகளைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அதனால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை கடந்த 3 நாட்களாக 996 பேருக்கு நடத்தப்பட்டது. அதில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 1744 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு