ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

தினத்தந்தி

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவத்தையும், இளமையையும் சரிசமமான கலவையாக கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்

போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 1980, 2016-ம் ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி வருமாறு:-

கோல்கீப்பர்: சவிதா, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நடுகளம்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி, முன்களம்: ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து