ஹாக்கி

புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.

தினத்தந்தி

புவனேசுவரம்,

9 அணிகள் இடையிலான புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டியது. இதில் இந்திய அணியின் தடுப்பு அரணை உடைத்தெறிந்த ஆஸ்திரேலியாவின் கை ஆரம்பத்திலேயே பலமாக ஓங்கியது. டைலன் வோதர்ஸ்பூன் (6-வது நிமிடம்), டாம் விக்ஹாம் (18-வது நிமிடம்), லாச்லன் ஷார்ப் (41-வது நிமிடம்), ஜாக்கப் ஆண்டர்சன் (42-வது நிமிடம்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு மத்தியில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் 36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார்.

ஒரு கட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் மோசமாக பின்தங்கி இருந்தது. கடைசி கட்டத்தில் ராஜ்குமார் பால் (47-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (52-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல் போட்டு ஆறுதல் அளித்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இன்று மீண்டும் இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு