ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

உலக ஆக்கி தொடரில், இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

புவனேசுவரம்,

2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங் 3 கோலும், மன்தீப் சிங், வருண்குமார் தலா 2 கோலும், குர்சாகிப்ஜித் சிங், நீலகண்ட ஷர்மா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். பி பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்க அணி 6-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. இதேபிரிவில் நடந்த அமெரிக்கா-ஜப்பான் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பி பிரிவில் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்றன. கோல் வித்தியாசம் அடிப்படையில் அமெரிக்க அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை