விளையாட்டு

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி: இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம்?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இருந்து பரோடாவுக்கு மாற்றம் செய்யப்படுமா என தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி அங்கு நடப்பதில் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீதத்திற்கு மேல் சலுகை டிக்கெட்டுகள் கொடுக்க முடியாது. இதன்படி இந்தூர் ஸ்டேடியத்தின் பெவிலியன் பகுதியில் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு 720 டிக்கெட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும். ஆனால் 10 சதவீத இலவச டிக்கெட்டுகள் போதாது. பெவிலியனில் 1,250 டிக்கெட்டுகள் வேண்டும். மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், முக்கியமான வி.ஐ.பி.க்கள், அரசு துறையைச் சேர்ந்தவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்க வேண்டி உள்ளது என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தர முடியாது என்றால் போட்டியை தங்களால் நடத்த இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் இந்த போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. அனேகமாக இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் பரோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து