பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் 13 வீரர்கள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ஷிவ தபா, தீபக் உள்பட 13 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் வருகிற 30-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 104 நாடுகளை சேர்ந்த 640 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1.63 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.81 லட்சமும், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.41 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை பதக்கம் வென்றரும், உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான ஷிவ தபா, ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கும் தீபக் போரியா உள்பட 13 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்திய குத்துச்சண்டை அணி வருமாறு:-

கோவிந்த் சஹானி (48 கிலோ உடல் எடைப்பிரிவு), தீபக் போரியா (51 கிலோ), சச்சின் சிவாச் (54 கிலோ), முகமது ஹூஸ்சாமுதீன் (57 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஷிவ தபா (63.5 கிலோ), ஆகாஷ் சங்வான் (67 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), ஆஷிஷ் சவுத்ரி (80 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (86 கிலோ), நவீன் குமார் (92 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோவுக்கு மேல்).

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்