பிற விளையாட்டு

16 வயது தமிழக செஸ் வீரர் பிரனேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

ஸ்டாக்ஹோம்,

சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் (பிடே) ரில்டன் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்தது. இதில் 29 நாடுகளை சேர்ந்த 136 வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரனேஷ் 8 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

5 வயது முதல் செஸ் விளையாடி வரும் காரைக்குடியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான பிரனேஷ் ஏற்கனவே கிராண்ட்மாஸ்டர் தகுதிக்குரிய 3 இலக்குகளை எட்டி இருந்ததுடன் எலோ ரேட்டிங்கில் 2,500 புள்ளிகளை கடந்துள்ளார்.

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள பிரனேஷ், தமிழகத்தில் இருந்து உருவான 28-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது