கோப்புப்படம் 
பிற விளையாட்டு

சென்னையில் 3 நாட்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..!

ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில கைப்பந்து போட்டி சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

ஆண்கள் பிரிவில் கல்லூரி அணிகளான எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்யபாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஜி.கே.எம்., பாரதியார் கிளப் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை