பிற விளையாட்டு

பல வருட போராட்டத்துக்கு பிறகு தமிழக செஸ் வீரர் ஷாம் நிக்கில் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

தமிழக செஸ் வீரரான ஷாம் நிக்கில் இந்தியாவின் 85-வது கிராண்ட் மாஸ்டராகி இருக்கிறார்.

தினத்தந்தி

துபாய்,

தமிழக செஸ் வீரரான ஷாம் நிக்கில் இந்தியாவின் 85-வது கிராண்ட் மாஸ்டராகி இருக்கிறார். கிராண்ட் மாஸ்டருக்கான முதல் தகுதி இலக்கை 2011-ம் ஆண்டும், 2-வது தகுதி இலக்கை 2012-ம் ஆண்டும் கடந்த ஷாம் நிக்கில் 3-வது மற்றும் கடைசி தகுதி இலக்கை 12 வருட போராட்டத்துக்கு பிறகு எட்டிப்பிடித்து சாதித்து இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த துபாய் போலீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் 9 சுற்றுகள் முடிவில் ஒரு வெற்றி, 8 டிரா கண்டு 5 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் எலோ ரேட்டிங்கில் 2,500-ஐ கடந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். அவர் தமிழகத்தின் 30-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது