பிற விளையாட்டு

ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

டாக்கா,

24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில்நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோதி சுரேகா வென்னம், தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோரை கொண்ட இந்திய அணி 236-234 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 147-145 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது பிரித்திகாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதனால் பிரித்திகாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா- தீப்ஷிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 153-151 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை