பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

யுஹான்,

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் கா இன்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் சாய்னா, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் சோய்ருன்னிசாவை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சிந்து அடுத்து சீனாவின் காய் யான் யானுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-19 என்ற நேர்செட்டில் கா லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு