Image Courtesy : @BAI_Media twitter 
பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் பிரியான்ஷு, பிரணாய் அரைஇறுதிக்கு தகுதி

இந்திய வீரர்கள் பிரியான்ஷு ரஜாவத் மற்றும் பிரணாய் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனேசிய வீரர் அந்தோணி ஜிண்டிங் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.

இதே போல் மற்றொரு ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியனான பிரியான்ஷு ரஜாவத் உடன் கிடாம்பி ஸ்ரீகாந்த் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் பிரியான்ஷு ரஜாவத் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்