Image Courtesy : @bwfmedia twitter 
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் சாம்பியன்

கரோலினா மரினை வீழ்த்தி அன் சே யங் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தினத்தந்தி

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முன்னணி வீராங்கனை கரோலினா மரினுடன் தென் கொரிய வீராங்கனை அன் சே யங் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-12, 21-10 என்ற நேர்செட்களில் கரோலினா மரினை வீழ்த்தி அன் சே யங் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் தென் கொரியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று அன் சே யங் சாதனை படைத்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு