Image : International Chess Federation 
பிற விளையாட்டு

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கியது.. வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா? மாக்னஸ் கார்ல்செனுடன் மோதல்

கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பாகு,

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார். அரைஇறுதி சுற்று இரு ஆட்டங்கள் கொண்டது. இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.

அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும். இதன்படி முதல் 2 ஆட்டம் டிரா ஆனது. 3-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் எதிராளியை அடக்கி அசத்தினார். எஞ்சிய ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் பிரக்ஞானந்தா 3-2 என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில்  நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்  பிரக்ஞானந்தா மோதும் இறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.இறுதிச் சுற்று இரு ஆட்டங்களை கொண்டதாகும்; போட்டி சமன் ஆனால் டை பிரேக்கருக்கு நகரும்.இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்