Image Courtacy: BAIMediaTwitter 
பிற விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு தகுதிபெற்ற பிரனாய்

கால்இறுதியில் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை பிரனாய் எதிர்கொள்ள உள்ளார்.

தினத்தந்தி

ஷின்சென்,

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாக்னஸ் ஜோஹன்சென்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பிரனாய் கால்இறுதியில் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை எதிர்கொள்கிறார்.

இதேபோல் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-15, 21-16 என்ற நேர்செட்டில் ஜப்பானின் அகிரா கோகே-தாய்சி சாய்டோ ஜோடியை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.

கால்இறுதியில் சாத்விக்-சிராக் கூட்டணி, இந்தோனேஷியாவின் லியோ ரோலி-டேனியல் மார்டின் இணையை சந்திக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்