பிற விளையாட்டு

காமன்வெல்த் செஸ் போட்டி: சென்னை மாணவி அஸ்வினிகா வெண்கலப்பதக்கம் வென்றார்

16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

தினத்தந்தி

காமன்வெல்த் செஸ் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் 9-வது மற்றும் கடைசி சுற்றில் 51-வது காய் நகர்த்தலுக்கு பிறகு முசோபோரோ லோனேவை (போஸ்ட்வானா) தோற்கடித்து 7 புள்ளியுடன் வெண்கலம் பெற்றார்.

சென்னை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரின் மகளான அஸ்வினிகா நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து