பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, சவுரவ் கோஷலுக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா, சவுரவ் கோஷலுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சவுரவ் கோஷல்-தீபிகா ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.

பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், தீபிகா ஆகியோர் நேற்று சென்னை திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் தீபிகா நிருபர்களிடம் கூறுகையில், 'காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை தயார்படுத்த திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொள்வேன்' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்