கோல்டுகோஸ்ட்,
காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினர் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 48 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.