image courtesy: AFP 
பிற விளையாட்டு

உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி

உலகக்கோப்பை வில்வித்தை தொடரின் இறுதிப்போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.

ட்லாக்ஸ்காலா,

2024-ம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டி, மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், தீபிகா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

வில்வித்தை உலகக்கோப்பையில், தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT