பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி

ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை போட்டியின் முதல் நாக் அவுட் சுற்றில் பூட்டான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை தீபிகா குமரி.

தினத்தந்தி

டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.

இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்