பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; இந்தியாவின் கிதம்பி முதல் சுற்றில் வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிதம்பி சக வீரரான பிரணீத்துடன் விளையாடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒடென்ஸ்,

டென்மார்க் நாட்டில் நடந்து வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.

இதில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார். போட்டி 30 நிமிடங்களில் முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...