கோப்புப்படம் 
பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கோபன்ஹேகன்,

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-13-, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஆண்டர்ஸ் அன்டன்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், பிரான்சின் அலெக்ஸ் லானியர் உடன் மோத உள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது