துபாய்,
மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகைக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, ஆன்டோனியா ருசிச்சிடம் (குரோஷியா) மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 1-6, 7-5, 2-6 என்ற செட் கணக்கில் ஆன்டோனியா ருசிச்சிடம் எம்மா ரடுகானு தோல்வி அடைந்தார்.