பிற விளையாட்டு

எலோர்டா கோப்பை: இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன் உடன் மீனாட்சி (48 கிலோ), அனாமிகா (50 கிலோ) மற்றும் மணீஷா (60 கிலோ) ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

தினத்தந்தி

அஸ்தானா,

கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் 2024-ம் ஆண்டுக்கான எலோர்டா கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்கள் பிரிவில் இந்திய குத்து சண்டை வீராங்கனைகள் 4 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன், 52 கிலோ எடை பிரிவில், கஜகஸ்தானின் வீராங்கனை தோமிரிஸ் மிர்ஜாகுல் என்பவரை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற புள்ளி கணக்கில் ஜரீன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அவருடன் மீனாட்சி (48 கிலோ), அனாமிகா (50 கிலோ) மற்றும் மணீஷா (60 கிலோ) ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த போட்டியில், மீனாட்சி மற்றும் மணீஷா ஆகிய இருவரும் முறையே குல்னாஸ் பரிபயேவா மற்றும் தங்கதர் ஆசிம் ஆகியோரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

அனாமிகாவுடனான போட்டியின்போது, எதிரில் விளையாடிய கஜகஸ்தான் வீராங்கனை குல்நார் துராப்பே 3 முறை எச்சரிக்கை விடுத்த பின்னரும் அனமிகாவை தொடர்ந்து இறுக பிடித்து கொண்டு இருந்த சூழலில், அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அனாமிகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து