கோப்புப்படம் 
பிற விளையாட்டு

தேசிய வாள் சண்டை போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பவானி தேவி

தேசிய வாள் சண்டை போட்டியில் பவானி தேவி சாம்பியன் பட்டம் வென்றார்

தினத்தந்தி

டெல்லி,

டெல்லியில் நடந்த 31-வது தேசிய சீனியர் வாள்சண்டை போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் இறுதி சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி 15-7 என்ற புள்ளி கணக்கில் கேரளாவின் ஜோஸ்னா ஜோசப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன்படி 9வது முறையாக தேசிய பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னையை சேர்ந்த பவானி தேவி சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் அவர் வாள்சண்டையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்ட முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை