Image Courtesy : ANI 
பிற விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பெர்லின்,

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார். 47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், லக்ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-6, 22-20 ன்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில்நடைபெற்ற போட்டியில், துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடியும், தோல்வியடைந்தனர்.

முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர். சிந்து தனது அடுத்த போட்டியில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரேல்ஸ் அல்லது சீனாவின் சாங்-இ-மானை எதிர்கொள்வார். ஸ்ரீகாந்த் அடுத்த போட்டியில் சீனாவின் லூ குயாங் சுவை எதிர்கொள்வார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு