பிற விளையாட்டு

கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருணா மோதினர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.

கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார்.

கிராண்ட் செஸ் டூரை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.