image courtesy: BAI Media twitter  
பிற விளையாட்டு

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் சமீர் வர்மா வெற்றி

இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், டென்மார்க் வீராங்கனை அமெலியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கவுகாத்தி,

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தேசிய சாம்பியனான மிதுன் மஞ்சுநாத் 21-14, 21-10 என்ற நேர்செட்டில் சக வீரர் ஹேமந்த் கவுடாவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 15-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை அமெலியை போராடி தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்