மும்பை,
பெண்கள் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான 43 வயதான இந்தியாவின் மேரி கோம், வயதாகி விட்டதால் இனி தேசிய அணிக்காக அமெச்சூர் குத்துச்சண்டையில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து விட்டார்.
அதனால் தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், மீண்டும் களம் திரும்ப கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.