புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. நேற்று 1 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் பதிவாகின. இது நாட்டில் பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து 24 மணிநேரத்தில் மிக அதிக அளவாகும்.
இதனை முன்னிட்டு இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளையும் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் ஹிமந்தா பிஸ்வா முடிவு செய்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக வருகிற 18ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெற இருந்த பேட்மிண்டன் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகின்றன. வருகிற மே மாதத்தில் ஐதராபாத்தில் நடைபெற இருந்த ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைக்கப்படுகின்றன.