பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு உயர்வு; அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்வால் அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. நேற்று 1 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் பதிவாகின. இது நாட்டில் பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து 24 மணிநேரத்தில் மிக அதிக அளவாகும்.

இதனை முன்னிட்டு இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அனைத்து உள்ளூர் பேட்மிண்டன் போட்டிகளையும் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் ஹிமந்தா பிஸ்வா முடிவு செய்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக வருகிற 18ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெற இருந்த பேட்மிண்டன் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகின்றன. வருகிற மே மாதத்தில் ஐதராபாத்தில் நடைபெற இருந்த ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளி வைக்கப்படுகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து