பிற விளையாட்டு

கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது

கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தது.

தினத்தந்தி

தோகா,

தோகாவில் நடந்து வரும் உலக தடகள போட்டியில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு களத்தில் குதித்தன. இதில் முகமது அனாஸ், விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ, நோவா நிர்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.14 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் போலந்து, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்ததுடன் இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. இந்த சீசனில் இந்திய குழுவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இறுதிசுற்றை எட்டியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் இந்திய அணி உறுதி செய்தது. இன்னொரு பிரிவில் அமெரிக்கா 3 நிமிடம் 12.42 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி புதிய உலக சாதனையோடு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்