கோப்புப்படம் 
பிற விளையாட்டு

உலக ஜூனியர் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு மேலும் இரு பதக்கம்

உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு பதக்கத்தை பெற்றது.

புதுடெல்லி,

உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளில் நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான சத்தீஷ் காரை சேர்ந்த ஞானேஸ்வரி ஸ்னாட்ச் முறையில் 73 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 83 கிலோவும் என மொத்தம் 156 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ரித்திகா மொத்தம் 150 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தோனேஷியாவின் வின்டி கான்டிகா அய்சாமொத்தம் 185 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது.

முதல் நாளில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா ஷரத் காருட் (45கிலோபிரிவு) தங்கப்பதக்கம் வென்று இருந்தார். உக்ரைன் மீதானபோர் எதிரொலியாக ரஷியா மற்றும் பெலாரஸ் வீராங்கனைகளுக்கு இந்த போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு காரணங்களால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்